Free Shipping for all order above $100 | Happy Diwali
Tag 'love tamil quotes'
அவள் என்னிடம் மறுஅறிமுகம் ஆன இந்த முக்கால் மணி நேரத்தில் முதல் முறையாக சிரிக்கிறாள்.
அவளுக்கான மருந்தை அவளுக்குள்ளே வைத்துக்கொண்டு மருத்துவமனை நாடி வந்த பேதை இவள். அவள் சிரிப்பு அவளுக்கு மட்டும் அல்ல, என் மன அழுத்தத்துக்கும் மருந்து.

சமீப "#அவளும் நானும் அலையும் கடலும் " பாரதிதாசன் வரிகளை 'அச்சம் என்பது மடமையடா'வில் ரசித்து முடிக்கும் முன்பே ,ரஹ்மான் அசத்தியிருக்கும் "காற்று வெளியிடை படத்தில் "நல்லை அல்லை" வரிக்கு என்ன அர்த்தம் என்று தேட தொடங்கி கிடைத்த குறுந்தொகை பாடல் "கருங்கால் வேங்கை வீயுகு துறுகல் இரும்புலிக் குருளையிற் றோன்றும் காட்டிடை எல்வி வருநர் களவிற்கு நல்லையல்லை நெடுவெண் ணிலவே". தலைவன் வருகையை ஊரார் அறிந்து கொள்ள ஏதுவாக ஏன் இவ்வளவு எரிக்கிறாய்? என நிலவை பார்த்து தலைவி ஊடல் கொள்ளுவது .
#நல்லை அல்லை =நன்மை தருவதாய் இல்லை" .

" அப்பா உன்ட்ட ஒண்ணு கேப்பேன் சொல்லுவியா " என்ற என் மகளின் குரலிலும் என் மனைவியின் சாயல்
"கேளுடி அம்மு , நீ கேட்டு நான் என்னைக்கு பதில் சொல்லாம இருந்தேன்" என்றேன்.
" ஏம்பா நிலா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி இருக்கு ? "
"ஏன் நம்ம டாமி நம்மள மாதிரி பேச மாட்டிங்குது. அதோட டாடி மம்மி அதுக்கு சொல்லி கொடுக்கலயா ? "
" ஏன்ப்பா நைட் ஆனா வெளியே கருப்பா இருக்கு ? "
என பல கேள்விகள்.

"உனக்கு ஒரு வேலை இருந்திருந்தா என்னை கல்யாணம் பண்ணியிருப்பல்லடா ? "
" என்னை மறந்துர மாட்டல்ல " போன்ற வாழ்விற்கும் மறக்க முடியாத வசனங்களை சொன்னவளே என் மகளின் ஆசிரியையாக நின்றுகொண்டிருந்தாள். அம்மு என்ற ஆனந்தி. கொஞ்சம் வயது ஏறி இருந்தாலும் கலையான அவள் முகத்தை இப்போதும் மகாலட்சுமி பெர்மணன்ட் லீசுக்கு எடுத்திருந்தாள்.
நீ ???...சாரி நீங்க ?
ரஞ்சனி என் பொண்ணு தான்..

Aanum Pennum Palaginaal kadhal endru porul kollum silaruku theriyavillai, adhanai vida natpe periyadhu endru... Natpe Thunai
