Free Shipping for all order above $100 | Happy Diwali
Tag 'motivational tamil quotes'
அவள் என்னிடம் மறுஅறிமுகம் ஆன இந்த முக்கால் மணி நேரத்தில் முதல் முறையாக சிரிக்கிறாள்.
அவளுக்கான மருந்தை அவளுக்குள்ளே வைத்துக்கொண்டு மருத்துவமனை நாடி வந்த பேதை இவள். அவள் சிரிப்பு அவளுக்கு மட்டும் அல்ல, என் மன அழுத்தத்துக்கும் மருந்து.

காமராஜரிடம் பேசும் போது, அவர் "அமருங்கள், மகிழ்ச்சி,நன்றி'' என அழகுத் தமிழில்தான் பேசுவார்.நேரு, சர்தார்படேல், சாஸ்திரி உள்ளிட்ட வட மாநிலதலைவர்களுடன் பேசும் போது மிக, மிக அழகான ஆங்கிலத்தில்காமராஜர் பேசுவதை பலரும் கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்துபோய் இருக்கிறார்கள்

சமீப "#அவளும் நானும் அலையும் கடலும் " பாரதிதாசன் வரிகளை 'அச்சம் என்பது மடமையடா'வில் ரசித்து முடிக்கும் முன்பே ,ரஹ்மான் அசத்தியிருக்கும் "காற்று வெளியிடை படத்தில் "நல்லை அல்லை" வரிக்கு என்ன அர்த்தம் என்று தேட தொடங்கி கிடைத்த குறுந்தொகை பாடல் "கருங்கால் வேங்கை வீயுகு துறுகல் இரும்புலிக் குருளையிற் றோன்றும் காட்டிடை எல்வி வருநர் களவிற்கு நல்லையல்லை நெடுவெண் ணிலவே". தலைவன் வருகையை ஊரார் அறிந்து கொள்ள ஏதுவாக ஏன் இவ்வளவு எரிக்கிறாய்? என நிலவை பார்த்து தலைவி ஊடல் கொள்ளுவது .
#நல்லை அல்லை =நன்மை தருவதாய் இல்லை" .

" அப்பா உன்ட்ட ஒண்ணு கேப்பேன் சொல்லுவியா " என்ற என் மகளின் குரலிலும் என் மனைவியின் சாயல்
"கேளுடி அம்மு , நீ கேட்டு நான் என்னைக்கு பதில் சொல்லாம இருந்தேன்" என்றேன்.
" ஏம்பா நிலா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி இருக்கு ? "
"ஏன் நம்ம டாமி நம்மள மாதிரி பேச மாட்டிங்குது. அதோட டாடி மம்மி அதுக்கு சொல்லி கொடுக்கலயா ? "
" ஏன்ப்பா நைட் ஆனா வெளியே கருப்பா இருக்கு ? "
என பல கேள்விகள்.

Aanum Pennum Palaginaal kadhal endru porul kollum silaruku theriyavillai, adhanai vida natpe periyadhu endru... Natpe Thunai
